Friday, 14 June 2024















 

 













பஜனை பாடல்கள்


ஓம் நமோ நமசிவாய!



ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ

செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ

தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ

அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. வைத்தீஸ்வரன் கோவில் வழிநடைப் பயணத்துக்காக ஒருத்தர் மெட்டு கொடுத்து, எழுத முடியுமான்னு கேட்டிருந்தார். அவருக்காக எழுதிய பாடல்...

சிவபுராணம் -

 சிவபுராணம் -

அருணகிரிநாதர் இயற்றியது திருப்புகழ்

 

திருப்புகழ் பாடல்கள்

 

எட்டாம் திருமுறை

 

ஏழாம் திருமுறை

 

ஆறாம் திருமுறை

 

ஐந்தாம்-திருமுறை

 

நான்காம் திருமுறை

 

மூன்றாம் திருமுறை

 

மூன்றாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

 

முதல் திருமுறை

 

அங்கமும் வேதமும்

 

1.006 – திருமருகலும் – திருச்செங்காட்டங்குடியும் – அங்கமும் வேதமும்

தோடுடைய செவியன்

 

1.001 – திருப்பிரமபுரம் – தோடுடைய செவியன்

கோவில் அமைப்பு முறை

 

கோவில் அமைப்பு முறை
💥💥💥💥💥💥💥💥💥
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய்

சிவன் மற்றும் அம்மன் கோயில் அமைப்பின் விளக்கம்

 

சிவன் மற்றும் அம்மன் கோயில் அமைப்பின் விளக்கம்

தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த 28 சிவன் கோவில்

 

தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவன் கோவில் விவரங்கள்..!

தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள்


சிதம்பரம் நடராசர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களிலும் முதன்மையானது

தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள் (Shiva Temples of Tamil Nadu) சிவபெருமான் இந்தியாவின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட எண்ணற்ற கோயில்களைக் கொண்டுள்ளது. [1] பெரும்பாலான கோயில்கள் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் 2,500 சிவன் கோயில்கள் உள்ளன. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பல வகையான கோயில்கள் உள்ளன.

பஞ்ச பூத ஸ்தலங்கள்[தொகு]

Monday, 10 June 2024

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

 


27 thevaram copy

அசுவினி :

தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

பரணி :

கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.

கிருத்திகை :

செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி :

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம் :

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம் :

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.

பூசம் :

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம் :

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே.

மகம் :

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம் :

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம் :

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.

அஸ்தம் :

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை :

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி :

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.

விசாகம் :

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம் :

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை :

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

மூலம் :

கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பூராடம் :

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம் :

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம் :

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :

கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி :

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி :

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி :

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.

Saturday, 8 June 2024

 


திருநாவுக்கரசு நாயனார்

 அப்பர் திருநாவுக்கரசு நாயனார் . 


ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ

கோளறுப் பதிகம்

 

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் கோளறுப் பதிகப் பாடல்கள் - விளக்கங்களுடன் இங்கே படிக்கலாம்!

பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் கொண்ட இந்த கோள்களின் தீவினையை நீக்கும் இந்த கோளறுப் பதிகப் பாடல்கள் சிறந்த பரிகாரப் பாடல்களாக விளங்குகின்றன.

சிவபுராணம

 

சிவபுராணம் பாடல் வரிகள்: சிந்தை மகிழ்விக்கும் சிவபுராணம

திருவாசகத்தின் ஒட்டுமொத்த சாரமும்... ஏன் சைவத்தின் கருத்துகள் மொத்தமும் சிவபுராணத்தில் அடங்கி விடுகின்றன என்றே சொல்லலாம்.

சிவபெருமான்
சிவபெருமான்

Thursday, 6 June 2024

திருவிழா உபயகாரர்கள்


திருவிழா உபயகாரர்கள்

----------------------------------------------------------------




i.முத்தர் குழு  -பொ.-மதியாபரணம்
2.பொ.சிவமணி வேலணை
3.சி.நல்லதம்பி குழு
4.திருமதி நா.இ.அருணாசலம்  குழு
5.நா.ஜெயக்குமார் (பாபு-சுவிஸ் )
6.திருமதி க.மார்க்கண்டு புங்குடுதீவு
7.முருகர் குழு பொ.கந்தையா
8.காசிநாதர் குழு   இ.பேரம்பலம்
9.ஆ.பேரின்பநாதன் உறவினர்கள்
10.க.சோமஸ்கந்தர் குழு கு.முத்துக்குமார்
11.பொ.பாலசிங்கம் குழு
வைரவர் மடை செ.கேதீஸ்வரன்
ஐயனார் அபிசேகம் சி.க.நல்லையா கனடா

2024 may Photos

 


கீர்த்தனைகள்

 கீர்த்தனைகள் 

---------------------------


விநாயகர் ஸ்துதி 

ராகம் அமிர்தவல்லி   தாளம் ஆதி 

பல்லவி பாமாலை பொலிந்து நான் பாடவருள் -கணேசா 

ராமலிங்க பர்வதவர்த்தனி பதம் துதித்து 

அனுபல்லவி 

பூமாலைப் பொழில் சூழும் பூங்குடிப்பதியிலே 

பாணாவிடைத்தலத்தில் கோவில் கொண்ட பெருமானை 

சரணம் 

தந்தையும் சிவனே தாயவளும் உமையே 

முந்தி  நீ வலம்வரத் தந்தான் மாங்கனியே

சிந்தை குவிந்து அந்தச் சிவபெருமானைப் பாட 

தந்தி முகத்தவனே  தந்தருள் தாரும் ஐயா 

ஆலய வரலாறு

 பாணாவிடைசிவன்

தலமூர்த்தி 

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்


யாழ்ப்பாணத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கின்ற சப்த 

Wednesday, 5 June 2024

தேர்த்திருப்பணி மற்றும் வேறு திருப்பணிகள் சுவிஸ் வரவு 02.05.2005

 

வரலாறு

 


பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே
ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.
சிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.
மாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்பதற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.
தொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
இவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
பர்வதவர்த்தினி சமேதரராக எழுந்தருளி இராமலிங்கேஸவரப்பெருமான் புங்குடுதீவு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.புலம்பெயர்  தமிழர்களால் இந்த ஆலயத்தின் திருப்பணி வேலைகள் அவ்வப்போது  நடைபெற்று வருகின்றன அன்னதான மடம் கோவில் பல கட்டுமானங்கள் தேர்முட்டி சித்திரத்தேர் என்பனவும் நிறைவுற்று உள்ளன  தற்போது  ஏழு  வாசல் கொண்ட சிற்ப ராஜகோபுரம் ஒன்றினை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் ஐரோப்பிய கனடா தேசமெங்கும் இதற்கென அமைப்புகளும் நிறுவப்படுள்ளன இவை பற்றிய மேலதிக விபரங்கள் இன்னொமோர் கட்டுரையில் உள்வாங்கப்படுள்ளன . புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தின் திருவிழா காலங்களில் தாயகம் சென்று பாணாவிடை சிவனை தரிசித்து செல்கின்றனர் அத்தோடு கோவில் நிறமான பணிகளை பார்வையிட்டு மேலும் செய்ய வேண்டிய கருமங்களை ஆவன செய்ய வழி  கோலுகின்றனர்