Thursday, 6 June 2024

ஆலய வரலாறு

 பாணாவிடைசிவன்

தலமூர்த்தி 

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்


யாழ்ப்பாணத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கின்ற சப்த 
தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே
ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.
சிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.
மாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்பதற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.
தொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
இவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
பர்வதவர்த்தினி சமேதரராக எழுந்தருளி இராமலிங்கேஸவரப்பெருமான் புங்குடுதீவு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.புலம்பெயர்  தமிழர்களால் இந்த ஆலயத்தின் திருப்பணி வேலைகள் அவ்வப்போது  நடைபெற்று வருகின்றன அன்னதான மடம் கோவில் பல கட்டுமானங்கள் தேர்முட்டி சித்திரத்தேர் என்பனவும் நிறைவுற்று உள்ளன  2024 இல் மீண்டும் இந்த ஆலயம் முற்றுமுழுதாக  புதிதாக கடத்தப்பட்டு  2024 ஜோலை 12 அம திகதி குடமுழுக்கு காண்கிறது .புலம்பெயர் தமிழரின் முதல் தலைமுறையின் இறுதிக்காலம்  நெருங்கி வருவதால்  அடுத்த தலைமுறை தாயகத்து வந்து  ஈர்த்து போன்ற ஆலயங்களை  கட்டி  நடத்தி வருவது அரிதான விஷயமே  இந்த கொள்கையை  மேல்கொண்டு இப்போது வாழ்கின்ற எமது புலம்பெயர்  மக்கள்  இந்த ஆலயத்தை நீண்ட  காலத்துக்கு  உறுதி. பலம் .வேதாகாமகோட்பாடு. இயற்கையால்  அழியாநிலை .நீண்டகால வல்லமை  என அமையும் பவண்ணம் தஞ்சை பெரிய கோயில் போன்ற  ஒத்த கட்டிட காலை வடிவில் சுமார் 80 வீதம் தனியே பாரிய கற்கல் படிவங்களால் பெரும் பொருட்ச்செலவில் அமை த்துள்ளனர்  ஒன்பது வாசல் கொண்ட உயரமான  பாரிய ராஜகோபுரம் ஒன்றினையும் கருங்கல்லினால் அமைத்து வரலாறு படைத்துள்ளனர்  கோவிலொடு மட்டும் நின்றுவிடாது  ராஜகோபுரம் தெற்கு கோபுரம். ஐயனார் கோவில் .கேணி .மரநடுகை .அன்னதானமடம் பழையதுறையில் இருந்து ஆலயம் வரையிலான  புதிய வீதி மடத்துவெளி கேரதீவு வீதியில் இருந்து பெத்தப்புகோயிலடியால் வருகின்ற பழையவீதி என அனைத்தை யும் ஒருங்கே சேர்த்து நிர்மாணித்துள்ளனர் இந்த ஆலயத்தின் இப்போதைய புதிய கட்டுமானப்பணிக்கென புலம்பெயர் நாடுகளில் சங்கம் அமைத்து  பாரிய நிதியினை திரட்டி மிகச்சிறப்பாக நிறைவு செய்திருப்பது பாராட்டுக்குரியதே 2015 இல் இந்த ஆலயம் உடைக்கப்பட்டு புதிய ஆலயத்தய் கட்டிட தொடங்கிய வேலை  கொரோனா சீரழிவு நாட்டில்  உண்டான  பெரும் பொருளாதார வீழ்ச்சி நெருக்கடியால் சற்று காலம்  தடைப்பதாலும் இப்போது  நிறைவுக்கு வந்துள்ளது 

No comments:

Post a Comment