Sunday, 2 June 2024

பக்தி செய்யும் மருதப்ப பக்தனுக்கருள் செய்தவன்



ராகம் கானடா தளம் ஆதி 
பல்லவி 
நெக்குருவி நினைப்பாள் நின்மனம் நெகிழும் 
திக்குப்புகள் பாணாவிடைத்தெய்வமு ன் உளம் மகிழும் 
அனுபல்லவி 
பக்தி செய்யும்மாறுத்தப்ப பக்தனுக்கருள் செய்தாய் 
மிக்க சரியை கிரியை த் தொண்டு செய்ய நீ உகந்தாய் 
சரணம் 
இரவு பகலாய் பக்தன் ராமலிங்க தொண்டு செய்தான் 
பரவிடும் பக்தி கண்டே பாலித்தருள் புரிந்தாய்
அரவு மதிநதி யும் அணிந்து காட்சியும் தந்தா ய் 
பு ர ப்பாணவிடை பூங்குடிச்சிவக்கொழுந்தே 

பூவில் பாணாவிடை தேவி பர்வதவர்த்தனி 
மேவி விடை மீதினிலே வீதி வளம் வந்தாய் நாதா 
நாவில் உன்னை போற்றிப் பாடும் நாமன் மாத்தியாபரணன் 
ஆவியுறுகித் தொழ ஆனந்த நிலையளித்தாய் 
----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment