ராகம் கானடா தளம் ஆதி
பல்லவி
நெக்குருவி நினைப்பாள் நின்மனம் நெகிழும்
திக்குப்புகள் பாணாவிடைத்தெய்வமு ன் உளம் மகிழும்
அனுபல்லவி
பக்தி செய்யும்மாறுத்தப்ப பக்தனுக்கருள் செய்தாய்
மிக்க சரியை கிரியை த் தொண்டு செய்ய நீ உகந்தாய்
சரணம்
இரவு பகலாய் பக்தன் ராமலிங்க தொண்டு செய்தான்
பரவிடும் பக்தி கண்டே பாலித்தருள் புரிந்தாய்
அரவு மதிநதி யும் அணிந்து காட்சியும் தந்தா ய்
பு ர ப்பாணவிடை பூங்குடிச்சிவக்கொழுந்தே
பூவில் பாணாவிடை தேவி பர்வதவர்த்தனி
மேவி விடை மீதினிலே வீதி வளம் வந்தாய் நாதா
நாவில் உன்னை போற்றிப் பாடும் நாமன் மாத்தியாபரணன்
ஆவியுறுகித் தொழ ஆனந்த நிலையளித்தாய்
----------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment