Sunday, 2 June 2024

பதம் நித்தம் அவன் வாசல் நின்று தொழுதேனடி


ராகம் ரஞ்சனி ராகம் ஆதி 
பல்லவி 
மாங்குயில் கூவிடும் பூங்குடிப் பாணாவிடை 
பூங்கமழ் சோலைதனில் ஆங்கவனை கண்டேனடி 
அனுபல்லவி 
பாங்கமர் பாவையான பர்வதவர்த்தனியைத் 
தாங்கி  அணைத்த ராமலிங்கேஸ்வரச் சிவனை 
சரணம் 
எண்ணமெல்லாம் சிவனின் எழிலை நினைக்குதடி 
கண்ணுதலான் இதழில் கணிநகை இனிக்குதடி 
பெண்ணுக்கிருக்கும் அந்தப் பித்தும் இதுதானோடி 

பித்தன் என்றாலும் என்ன பேயன் என்றாலும் என்ன 
சித்தம் மயங்குதடி சிவராமேஸ்வரன் அழகில் 
நித்தம் அவன் வாசல் நின்று தொழுவேனடி 
இத்தரையில் சிவபிரான் இனிய கழல் சேர்வே னோ 

No comments:

Post a Comment