ராகம் பாகேஸ்ரீ தளம் ஆதி
பல்லவி
அற்புதம் காட்டி எமை ஆட்கொள்கிறான் -தெய்வ
பொ ற்புறு பாணாவிடைப்புர ராமலிங்கேஸ்வரன்
அனுபல்லவி
சிற்பரன் தற்பரன் சிவராமலிங்கேஸ்வரன்
நற்புகழ் பெற்றிடும் நற்றவ பூங்குடியில்
சரணம்
மன்னிடும் கோயிலிலே மகேஸ்வரபூசை செய்ய
வன்ன வைகைறையிலே வடித்துப்படைத்த சாத
அன்னம் ஆவி பறந்து ஆதித்தன் மறைந்த பின்னும்
இன்னமுதாய ஆறாது இருக்கும் அதிசயமாம்
உப்புக்கடலருகே உவந்து நன்னீர் கரந்தே
எப்போதும் நல்கிடுவான் ஏந்தல் ராமலிங்கநாதன்
இப்புவியில் பாணாவிடை இலங்கு பூங்குடியில்
அப்பன் ராமலிங்கேஸ்வரன் அனைவரும் வியக்கும் வண்ணம்
No comments:
Post a Comment