ராகம் சிந்துபைரவி தாளம் ஆதி
கருணையே உருவானா தாயே -தேவி
அருளை அள்ளியே தரும் அன்னை பர்வதவர்த்தனி
அனுபல்லவி
திருவிளங்கும் பூங்குடித் திகழு ம்பாணாவிடை
பெருமான் ராம்லிங்கன் பிரியமனோஹரி
சரணம்
அன்னையும் நீ அல்லவோ அண்டசராசரம்
தன்னையே தாங்கியே தன்னருள் புரிபவளே
வண்ணக்கடலலைகள் வந்து வந்து பாடும்
நன்னகர்ப் பூங்குடிப் பர்வதவர்த்தனியே
அன்புருவானவளே ஆதிபராசக்தி
இன்பமே எமக்கு என்று இறைஞ்சிடும் தாயவளே
துன்புறுவார் துயர் துடைத்திடும் ஆதி சக்தி
தூய பாணாவிடைத் திருக்கோயில் கொண்ட தேவி
No comments:
Post a Comment