ராகம் மலையமாருதம் தாளம் ஆதி
பல்லவி
எல்லாம் அறிந்தவனே -சிவனே
என்னுள்ளம் அறியாயோ ராமலிங்கேஸ்வரா
அனுபல்லவி
நல்லாசி தந்து நின்றாய்
நாவாரப்பாடு என்றாய்
வல்லானே வண்டமிழில்
வாழ்த்தியுனை பாடினேன்
சரணம்
அஞ்சல் என்றருளாயோ அபாயமும் தாராயோ
கஞ்சமலரின் கண்ணால் காசினியில் எனைப்பாராயோ
வஞ்சகர் செயல் கண்டும் வாரா திருப்பாயோ
தஞ்சமென்றுனையடைந்தேன் தரணியில் எனைக்காப்பாய்
ஆலகாலம் அருந்தி அருள் புரிந்தாய் தேவர்க்கே
காலகாலன் ஆனாய் காக்கச் சிறுவேதியன்
பாலன் உனைச் சரணடைந்தேன் பாலித்தருள் ராமலிங்கா
நீலக்கடல் சூழ் பூங்குடிப் பாணா விடைத்தல தேவா
No comments:
Post a Comment