Sunday, 2 June 2024

மார்க்கண்டனுக்காக மறலியை உதைத்தவன்


ராகம் கரஹரப்பிரியா தாளம் ஆதி

பல்லவி 

ராமலிங்கேஸ்வரனே அபயம்  - சிவ

பூமியாம் பூங்குடியின் பாணா விடைப்பரனே 

அனுபல்லவி 

பூமலர்ப்பாதம் நாடி பாணவிடைத் தலத்தில் 

கோபுரவாசல் வந்தேன் கிருபையை வேண்டி நின்றேன் 

சரணம் 

மார்க்கண்டனுக்காக மறலியையே உதைத்தாய் 

ஆர்க்கும் சிலம்பொலிக்க அம்பலத்தில் ஆடி நின்றாய் 

பார்த்திடுவாய் சிவனே பர்வதவர்த்தனிப்பதியே 

மார்க்கமொன்றுமறியேன் மலரடி நான் பிடித்ததேன் 


சரணடைந்திடுவோரின் சஞ்சலம் தீர்த்து வைப்பாய் 

கிராமத்தில் சூலமேந்தும் கபாலீச்சரனே அருள் 

பரமேஸ்வரனே கௌரி பர்வதவர்த்தனி மணாளா 

புரப்பூங்குடில் பாணாவிடைக்கோவில் கொண்ட தேவா

No comments:

Post a Comment