விநாயகர் ஸ்துதி
ராகம் அமிர்தவல்லி தாளம் ஆதி
பல்லவி பாமாலை பொலிந்து நான் பாடவருள் -கணேசா
ராமலிங்க பர்வதவர்த்தனி பதம் துதித்து
அனுபல்லவி
பூமாலைப் பொழில் சூழும் பூங்குடிப்பதியிலே
பாணாவிடைத்தலத்தில் கோவில் கொண்ட பெருமானை
சரணம்
தந்தையும் சிவனே தாயவளும் உமையே
முந்தி நீ வலம்வரத் தந்தான் மாங்கனியே
சிந்தை குவிந்து அந்தச் சிவபெருமானைப் பாட
தந்தி முகத்தவனே தந்தருள் தாரும் ஐயா
நீலத்திரைக்கடல் சூழும் பூங்குடிப் பதிதனில்
கோலப்பாணவிடைக்கோவில் கொண்ட சிவனைச்
சீலப்பர்வதராஜன் செல்வி உமையைப் பாடிச்
சாலத்தொழு அருள்வாய் சித்திவிநாயகனே
No comments:
Post a Comment