ராகம் பெலஹரி தாளம் ஆதி
பல்லவி ராமலிங்கம் இருக்க பூமலர் பூங்குடியிருக்க
நாமப்பாணாவிடை இருக்க நலிவுமுண்டோ மனமே
அனுபல்லவி
பாமாலை அரசன் மகள் பர்வதவர்த்தனி இருக்கும்
பூவுலகில் எமக்கு பொல்லாவினைகள் உண்டோ
சரணம்
பாவக்கடல் கடக்க பாணா விடை சிவனருள்வான்
தேவன் ராமலிங்கேஸ்வரன் திருவருள் புரிந்திடுவான்
ஆவலாய் பாணாவிடைக் கோயில் வளம் வருவாய்
பூவடி பூசை செய்வாய் புவியில் இன்பம் தருவான்
கண்ணப்பனுக்கிரங்கி கருணையும் புரிந்தவன்
வண்ணப்பத்தி பாணாவிடை வந்து கோயில் கொண்டவன்
பெண்ணை இடம் அனைத்தவன் பேரின்பம் தந்திடுவான்
எண்ணமிருத்தி என்றும் எழில் கழல் ஆடித்துதிப் பாய்
No comments:
Post a Comment