அன்னை பர்வதவர்த்தனி சமேதராகி
அரனார் ராமலிங்கேஸ்வரர் மகிழ்ந்தே
கன்னல் தமிழ்த்திரு ஊஞ்சல் தனிிலே வைதி
கழித்தாட ஊஞ்சல் இசை பாடி ஏத்த
வன்ன மருப்பழகனான வாரணனின்
வளம் திகழும் செஞ்சரணம் காப்பதாமே
வேத நாற் பவளத் தூண் விளங்க நாட்டி
விரிந்த சிவா கமல வயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறு மாட்டி
நளின ஓங்காரமெனும் பீடம் தேக்கு
மாதவளாம் பர்வவதர்த்தனியாளோடு
மருவு தமிழ்த்திரு ஊஞ்சல் தனிலே வைகி
அன்பொழுகும் கால் நிறுத்தி ஆத்மஜீவன்
ஐந்து புலன் விட்டமதை ஒன்றாய் சேர்த்து
இன்புற நாற்கரண வட மிழுத்தே மாட்டி
இணைந்த திருவருள் என்ற பீடம் தேக்கி
என்புருக பேரின்ப முத்தி ஊஞ்சல்
எழிலாக ஜீவனவன் ஆடலருள் செய்
இன்பதியாம் பூங்குடியின் பாணாவிடை
ராமலிங்கேஸ்வரரே ஆடிர் ஊஞ்சல்
பனியரவு மதிச்சடையின் குஞ்சியாட
பால் வெண்ணீற் றழகினொடு நுதலு மாட
குனிவுதவழ் புருவச் செவ்விதழ் களோட
குமிழ் இதழின் நகையழகு கொஞ்சி யாட
புனையு குண்டலங்களுடன் தோடு மாட
புலித்தோலின் உரையாடல் பூணூல் ஆட
இனியபாதிப் பூங்குடியின் பாணா விடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
பரைவர்வதவர்தனி மருவி ஆட
பாம்பினாபரணங்கள் சுழன்றே ஆட
வரை கடந்த அருள் நல்கும் வரதம் ஆட
வரும் அடியார் பயம் தீர்க்கும் அபயம் ஆட
நிரைநிரையாய் நின்வாசல் நித்திற்கும் பக்தர்
நித்திலம்சேர் ஆனந்த விழிநீராட
இரைகடல் சூழ் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
துலங்காரத் துடியதுவும் ஒலித்தே ஆட
தீப்பிழம்பின் ஆனந்த ஜோதி கரத்திலாட
கலங்குவிழி மானாட மழுவும் ஆட
காதல்மிகு பர்வதவர்த்தனியாளாட
தலங்கரையின்கடலாட அலைகளோட
தந்த முகததைய னவன் கூத்துமாட
இலங்குபதிபூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
பனகமணிக்கமலவட மாலை ஆட
பர்வதவர்த்தனியாளும் மருவி ஆடக்
கனக வட அக்கமாலை வடமுமாட
கண்டமதில் நீலகண்டம் மிளிர்ந்தே ஆட
சனக சந்தனர் நால்வர் பாடி ஆட
சாரங்கன் பிரமனோடு தேவர் ஆட
இனமலர்சூழ் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
ஞாயிறு திங் கள் அக்னிக்கண்களாட
ஞானியர் போற்று செவ்வாய் முறுவல் ஆட
தோயு சம்பு தன்கழுத்தில் வியாழன் ஆட
திருப்பாத வெள்ளி சிலம்பு மாட
ஆலவிடை தனிலே ஆசனிக்கும்
அம்மை பர்வதவர்த்தினி அருளை அள்ளி
ஈயுத்தலப்பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
மண்சுமந்த பிட்டுண்ட களைப்பும் தீர
மன்னன் ஆராதித்த ஆதி வழியும் மாறக்
கண்ணெழுந்த குருதிச்சொரி நோவும் ஆறாக்
கண்ணப்பன் கால் பட தளும்பும் ஆறக்
பண்சுமந்த சுந்தரர் சொற்பித்தம் நீங்க
பரவைக்கு தூது சென்ற பாதம் தங்க
அண்ணலருள் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
தென்னிலங்கை வேந்தனவன் இராவணேஸ்வரன்
தினவெடுத்த தோள்களினால் மலையைத் தூக்க
சென்னியிற் கால் விரலூன்றிச்செருக்கும் தீர்த்துச்
செவியார வீணையிசை கேட்ப்பாய் தேவா
முன்னிரு மண்டோதரிக்கு மகிழ்ந்தேயருள்
மல்கிய ராமலிங்கேஸ்வரனும் நீயே
இன்னிசை சூழ் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
சங்கரனே சாம்பசிவா ஆடீர் ஊஞ்சல்
சாரங்கன் மைத்துனரே ஆடீர் ஊஞ்சல்
துங்கமுகன் தந்தையே நீர் ஆடீர் ஊஞ்சல்
தோகைவேலன் சீடரே நீர் ஆடீர் ஊஞ்சல்
திங்களணி வேனியாரே ஆடீர் ஊஞ்சல்
திருக்கைலாசத்துறைவோய் ஆடீர் ஊஞ்சல்
இங்கிதம்சேர் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்
வாழி
மறையோடும் வானவரும் மாரி வாழி
மாதுபர்வதவர்த்தனி அம்மை வாழி
குறையேதும் இல்லாத செங்கோல் வாழி
குவலயத்தில் மாதரவர் கற்பும் வாழி
நிறைவெல்லாம் நீடூழி வாழி வாழி
நெஞ்சமதில் இறைபக்தி பொங்க வாழி
இறையருட்பூங்குடிப் பாணாவிடையும் வாழி
இராமலிங்கேஸ்வரரும் வாழி வாழி
No comments:
Post a Comment