ராகம் ஷஹானா தாளம் ஆதி
பல்லவி
சித்தம் இரங்கிடாயோ சிற்பரனே
அத்தனே ராமலிங்க அம்பலத்தாண்டவனே
அனுபல்லவி
கத்தும் திரை கடல் சூழ் கவின் பூங்குடிப்பதியில்
வித்தக அருட்கோயில் விளங்கும் பராபரனே
சரணம்
வாணாளில் நின்னருள் வதானாம்புஜம் காண்பேனா
பாணாவிடை வாசல் வந்து பக்தியாய் தொழுவேனா
காணாமல் இருப்பேனா கழலடி மறப்பேனா
பூணாதி பன்னகங்கள் பூணும் ராமலிங்கேஸ்வரா
No comments:
Post a Comment